நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பரிசோதனை

நீரிழிவு நோயாளிகளிடையே கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் நோக்கத்தில் சமூக மன்றங்களைத் தாண்டி கண் பரிசோதனைகளை விரிவுபடுத்த அரசாங்கம் பரி சீலித்து வருகிறது. செங்காங்கில் உள்ள எங்கர் வேல் சமூக மன்றத்தில் நேற்று சுமார் 500 குடியிருப்பாளர்கள் பங் கேற்ற கண் பரிசோதனை நிகழ்ச்சி யில் பேசிய சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின், நீரிழிவு நோயால் விளையும் சிக் கல்களைக் குறைக்கும் முயற்சிகளை முடுக்கிவிட அரசாங்கம் விரும்புகிறது என்று கூறினார்.

நீரிழிவால் விழித்திரை பாதிக் கப்படுவதே சிங்கப்பூரில் வேலை செய்யும் பெரியவர்களிடையே பார்வை இழப்பு ஏற்படுவதற்கு முக் கிய காரணம். நீரிழிவு நோய் தொடர்பான மருத்துவ சிகிச்சைகளை மேம்ப டுத்தும் வழிவகைகளை ஆராயும் பணிக் குழுவுக்குத் தலைமை தாங்கும் டாக்டர் லாம், சமூக மன்றங்களைத் தாண்டி நடத்தப் படும் நீரிழிவு கண் பரிசோதனை கள் பற்றி கருத்துரைத்தார். "இது பற்றி எனது பணிக் குழு ஆராய்ந்து வருகிறது. அதிக மான நீரிழிவு நோயாளிகளைச் சென்றடைந்து அவர்களுக்கு கண் பரிசோதனை நடத்துவது எங்கள் இலக்கு," என்று குறிப் பிட்ட அமைச்சர் லாம், தற்போது நடப்பில் உள்ள சிங்கப்பூர் ஒருங்கி ணைந்த நீரிழிவு விழித்திரை பரி சோதனைத் திட்டத்தை இதர நோயாளிகளுக்கும் விரிவுபடுத் துவது பற்றியும் தமது பணிக் குழு பரிசீலித்து வருகிறது என் றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!