ஜகார்த்தாவில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போர்க்கொடி

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநரான திரு பசுக்கி ஜாஜா புர்ணாமா பதவி விலகவேண்டும் என்று கோரி தீவிரவாதப் போக்கு கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அந்நகரில் நேற்றுப் பேரணி நடத்தினர்.

ஆஹோக் என்று அழைக் கப்படும் திரு புர்ணாமா, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இழிவுபடுத் தியதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த திரு புர்ணாமா, ஜகார்த் தாவின் ஆளுநராகப் பதவியேற் றுள்ள முதல் சீன இனத்த வராவார். உலகிலேயே ஆக அதிக மான இஸ்லாமியர்களைக் கொண்டுள்ள இந்தோனீசியா வில் பெரும்பாலும் மிதமான போக்குகொண்ட இஸ்லாம் கடைபிடிக்கப்படுகிறது.

ஜகார்த்தா ஆளுநரின் அலுவலகத்தைப் பேரணி கடந்து சென்றபோது லாரிகளில் பயணம் செய்தவாறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒலிப்பெருக்கி வாயிலாக திரு புர்ணாமாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். பேரணியில் கிட்டத்தட்ட 200,000 பேர் கலந்துகொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!