சிங்கப்பூரின் முக்கியமான நீர் ஆதாரத்தில் நீர் பெருமளவு குறைந்துள்ளது. சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையில் 50 விழுக் காட்டுக்கும் மேலாக நிவர்த்தி செய்யக்கூடிய ஜோகூர் பாரு லிங்கியு நீர்த்தேக்கத்தில் 22% மட்டுமே நீர் உள்ளது. கடந்த மாதம் அது 25 விழுக்காடாக இருந்தது. இந்தத் தகவல்களை நேற்று நடைபெற்ற 'தூய்மை, பசுமை சிங்கப்பூர்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்தார்.
தண்ணீர்ப் பாதுகாப்பை மேம் படுத்த அரசாங்கம் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தாலும் அன்றாட வாழ்வில் நமது பழக்கவழக்கங்களைச் சரிப்படுத் திக் கொண்டால் மட்டுமே நீர்வளம் நீடித்திருக்கும் என்று கூறிய திரு லீ, நீரைச் சேமிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
காத்திப் எம்ஆர்டி நிலையத்திற்கு எதிரே இருக்கும் திடலில் நடந்த தூய்மை, பசுமை கேளிக்கை விழாவில் சிறாருடன் அளவளாவும் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
முழு விவரம்: அச்சுப்பிரதியில்