பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த உடற்குறையுள்ளோருக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட் டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த விளையாட்டாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று சிறப் பிக்கப்பட்டனர்.
அந்தப் போட்டிகளில் சிங்கப்பூர் சார்பில் 13 விளையாட்டாளர்கள் கலந்துகொண்டனர். நீச்சல் வீராங் கனைகளான யிப் பின் சியூ இரு தங்கப் பதக்கங்களையும் திரேசா கோ ஒரு வெண்கலத்தையும் கைப் பற்றினர். பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டு வதற்கு வகை செய்யும் மசோதாவை கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் குழுவாக இணைந்து அதிகாரபூர்வமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக பாராலிம்பிக் விளையாட்டாளர்களுடன் 'செல்ஃபி' எடுத்துக்கொள்ளும் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்