அனைத்துலக உடற்குறையுள் ளோர் தினத்தை சிங்கப்பூர் பெருமையுடன் கொண்டாடலாம் என்று சமுதாய, குடும்ப மேட்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் தமது ஃபேஸ்புக் பதிவில் நேற்றுக் கூறியுள்ளார். சிங்கப்பூர் இவ்வாண்டு எதற் கும் சளைக்காத உணர்வுடன் ரியோ நகரில் நடைபெற்ற பாரா லிம்பிக் விளையாட்டுப் போட்டி களில் வெற்றிகளை ஈட்டிய நாட்டின் வீரர்களைக் கொண்டா டியது. அதைத் தொடர்ந்து உடற் குறையுள்ளோரை உள்ளடக்கிய சமுதாயமாக சிங்கப்பூரை அடுத்த ஐந்தாண்டுகளில் உருவாக்கும் மூன்றாவது பெருந்திட்டப் பணி கள் தொடங்கியுள்ளன. இது ஒருபுறமிருக்க, கட்டாயக் கல்வியை 2019ஆம் ஆண்டி லிருந்து சிறப்புத் தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அனைத்துலக உடற்குறையுள்ளோர் தினத்தை முன்னிட்டு உடற் குறையுள்ளோர் சிலருடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான். படம்: திரு டானின் ஃபேஸ்புக்