ஆழமான மரபுடைமை உடைய லிட்டில் இந்தியாவின் தனித்தன் மையைத் தக்கவைத்துக்கொள் வது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ. சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப் பயணிகள் ரசிக்கும் விதத்தில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் குடியி ருப்பாளர்களும் லிட்டில் இந்தியா சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத் திருக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஃபூ கூறினார். "அதே நேரத்தில் அவ்விடம் அலங்கோலமாகவும் அசுத்தமாக வும் இருக்க அனுமதிக்கக் கூடாது. இரண்டுக்குமிடையே சமத்துவமான அணுகுமுறையைக் கையாள்வது முக்கியம்," என்று குறிப்பிட்ட அவர், கடந்த செவ் வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
இந்திய கலாசாரத்தையும் மரபுடைமையையும் பிரதிபலிக்கும் லிட்டில் இந்தியாவை அனைவரும் கட்டிக்காக்க வேண்டும் என்றார் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: திமத்தி டேவிட்