பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை மலேசியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மலேசியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கடந்த மாதம் 21ஆம் தேதியி லிருந்து 26ஆம் தேதி வரை நடத்திய அதிரடி நடவடிக்கை யின்போது இந்த ஏழு பேரும் சுற்றி வளைக்கப்பட்டனர்.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஏமன் நாட்டவரை கைது செய்து கொண்டு செல்லும் மலேசியக் காவல்துறையினர். படம்: மலேசியக் காவல்துறை