மூன்று கதவுகள், யுஎஸ்பி வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளை நிலப் போக்குவரத்து ஆணையம் சோதனை ஓட்டத்தில் விட்டுள்ளது. நேற்று முன்னோட்டத்தில் விடப்பட்ட ஈரடுக்குப் பேருந்துகளுக்கு இரண்டு படிக்கட்டுகள் உள்ளன. பயணிகள் பேருந்துகளில் ஏறு வதையும் இறங்குவதையும் மேலும் எளிதாக்க மூன்று கதவுகளும் இரண்டு படிக்கட்டுகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது. குறிப்பாக, உச்சநேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பேருந்துகளில் ஏறுவதும் இறங்குவதும் சிரமமாக இருக்கும். இந்த நிலையைச் சரிசெய்ய புதிய ஏற்பாடு எவ்வாறு கைகொடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்தச் சோதனை ஓட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
மூன்று கதவுகள் கொண்ட புதிய பேருந்து. பேருந்தின் பின்புறத்தில் மேலும் ஒரு படிக்கட்டு (வலதுப் படம்). படம்: வான்பாவ், நிலப் போக்குவரத்து ஆணையம்