புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள செங் காங் பொது நூலகம், 'காம்பஸ் ஒன்' கடைத்தொகுதியில் புதிய வசதிகளுடன் நேற்று பொது மக்களுக்கு திறந்து வைக்கப் பட்டது. பெரிய இடவசதி கொண்டுள்ள இந்நூலகம், 10 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்க ளுக்கான தனி இடம் கொண்டி ருக்கும் முதல் நூலகமாக விளங் குகிறது. அந்த இடம் அவர்களின் அனுபவபூர்வ கற்றலுக்கும் குழு நடவடிக்கைகளுக்கும் ஆதரவ ளிக்கும். செங்காங் வட்டாரத்தில் அதிக மான எண்ணிக்கையில் இளம் குடும்பங்கள் வசிப்பதால் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய நூலக வாரியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
புதிய இடவசதி களுடன் நேற்று திறக்கப்பட்ட செங்காங் பொது நூலகத் தில் பெருந்திர ளாக மக்கள் வந்து இருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்