ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் போராட் டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 100 பேர் நேற்று கைது செய்யப் பட்டனர். திருச்சியில் விவசாயி களுக்கு ஆதரவாகப் போராட் டம் நடத்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 20 பேரை போலிசார் கைது செய்தனர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், தமிழக விவ சாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்கப் படவேண்டும் எனக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர் என்ற தகவல் வெளியானது.
கடலில் இறங்கி போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரைத் தடுத்து அழைத்துச் செல்லும் போலிசார். படம்: சதிஷ்