காலாங் ஆற்று வட்டாரத்தை வாழ்க்கைப்பாணி மையமாக்க பிரம்மாண்ட திட்டங்கள் தீட்டப்பட் டுள்ளன. நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று தொடங்கிய ஒரு கண்காட்சியில் அந்தத் திட் டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. காலாங் ஆற்று வட்டாரத்திற்குப் புதுப்பொலிவையும் புத்துயிரையும் அளிக்கும் வகையில் பரந்த அளவில் ஐந்து முக்கிய யோசனை கள் முன்வைக்கப்பட்டு இருக்கின் றன. "அதோ அது வழியாக ஓர் ஆறு ஓடுகிறது" என்ற ஆணை யத்தின் கண்காட்சி, காலாங் ஆற்று வட்டார மேம்பாடு பற்றிய கருத்துகளையும் யோசனைகளை யும் தெரியப்படுத்துமாறு பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறது. தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அந்தக் கண் காட்சியைத் தொடங்கி வைத்தார். நகர மறுசீரமைப்பு ஆணையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
தீவு விரைவுச்சாலையில் குறுக்கு இணைப்புப் பாலமாக இப்படி ஒரு சுருள்வட்ட மேம்பாலத்தை அமைக்கலாம் என்று ஒரு யோசனை உள்ளது. இது, சைக்கிளோட்டிகள், மெதுவோட்டக்காரர்கள் விரைவுச்சாலையை வசதியாகக் கடக்க இது உதவும். படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்