வங்கிக் கடன் ரத்து, கூடுதல் வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 32வது நாளைத் தொட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகப் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தியபோதிலும் பிரதமர் மோடியோ மத்திய அரசாங்கமோ தங்களைச் சந்தித்து கோரிக்கை களை செவிமடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் விவசாயிகள் தவிக் கின்றனர். எனவே, கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வண்ணம் விவ சாயிகள் புடவை அணிந்து போராட முடிவு செய்தனர். அதன் படி நேற்று ஒன்பது விவசாயிகள் பெண்களைப் போல புடவை அணிந்து சாலைகளில் சென்று தங்களது கோரிக்கைகளை முழங் கினர்.
தமிழக விவசாயிகளில் 9 பேர் புடவை அணிந்து டெல்லியின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர். ஒரு மாதத் திற்கு மேலாக போராடியும் கவனிக்காத மத்திய அரசாங்கத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்க இந்தப் போராட்டம் நடத்தப்பட்ட தாக அவர்கள் கூறினர். படம்: இந்திய ஊடகம்