வில்சன் சைலஸ்
நிதி திரட்டு போன்ற நல்ல நோக்கத்திற்காகவும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்ற சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா, தமிழிலும் இந்தியிலும் பாடி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மகிழ்வித்தார். 'ஹெண்டர்சன்=டாசன்' குடி மக்கள் ஆலோசனைக் குழு, இந்திய வர்த்தகத் தலைவர்களின் வட்டமேசை அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த நிதி திரட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நேற்று அவர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் $300,000த்திற்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டது. நிகழ்ச்சியின்மூலம் திரட்டப் பட்ட நிதியின் ஒரு பகுதி சிண்டா வின் 'ஸ்டெப்' துணைப்பாட வகுப்புகளுக்கும் பாலர் பள்ளி களின் 'லின்' திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் என்ற சிண்டா வின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, "உதவித் தேவைப்படுவோரிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நிதியின் ஒரு பகுதி பயன்படுத் தப்படும்," என்றார்.
ஹெண்டர்சன் - டாசன் தொகுதியின் வசதி குறைந்த குடும்பங்களுக்கும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமான சிண்டாவிற்காவும் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியில் 'வான் மேகம்' என்ற தமிழ்ப் பாடலையும் இந்தி மொழிப் பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார் அமைச்சர் இந்திராணி ராஜா (இடது). உடன் அவருடைய பாட்டுக்கு இசையமைத்து மகிழ்ந்த பிரபல இசையமைப்பாளர் முகம்மது ரஃபி. படம்: திமத்தி டேவிட்