அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் திரவ எரிவாயுவை அதற்குரிய கப்பலில் ஏற்றும் வசதியைக் கொண்ட துறைமுகம் தயாராகி விடும் என்று வர்த்தக தொழில் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்துள்ளார். உலகளாவிய கந்தக வெளி யேற்ற வரம்பை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 0.5 விழுக்காட்டுக்கு உயர்த்த அனைத்துலக கடல்துறை அமைப்பு கடந்த ஆண்டு அக்டோ பர் மாதத்தில் அறிவித்ததற்கு ஏற்ப, அமைச்சரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. 'பெவிலியன் எனர்ஜி' நிறுவ னத்தின் திரவ எரிவாயு துறைமுகத் தின் செயல்பாடுகளைச் செய்து காட்டிய நிகழ்ச்சியில் டாக்டர் கோ பங்கேற்று பேசினார். இந்நிறுவனம் எரிவாயு ஏற்றுமதியை நேற்று தொடங்கியது.
ஜூரோங் துறைமுகத்தில் நேற்று திரவ எரிவாயு கப்பலில் ஏற்றப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்