ஹில்வியூ அவென்யூவில் அமைந் துள்ள கூட்டுரிமை வீடுகளுக்கு வெளியே 44 வயது ஆடவர் ஒருவரைக் காட்டுப்பன்றி தாக்கி காயப்படுத்திவிட்டது. நேற்றுக் காலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த ஆட வரின் இரு கால்களிலும் சிராய்ப்பு களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டன. ஹில்வியூ எம்ஆர்டி நிலையத்தை நோக்கி நடந்து சென்றபோது அந்தப் பன்றி தம்மை நோக்கி வருவதை அந்த ஆடவர் உணர்ந்தார். சுதாரித்து ஓடத் தொடங்கிய அவர், நிலைதடுமாறி விழ, பன்றி யின் தாக்குதலிலிருந்து அவரால் தப்ப இயலவில்லை. அதன்பின் அவ்விடத்தைவிட்டு அந்தப் பன்றி தப்பித்து ஓட முயன்றபோது அவ்வழியாக வந்த பேருந்து அதன்மீது மோதியது.
காயம்பட்ட அந்தப் பன்றி பின்னர் இறந்துவிட்டது. சம்பவம் குறித்து காலை 8.43 மணிக்குத் தகவல் கிட்டியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார். பன்றி தாக்கி காயமடைந்த ஆடவர் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காட்டுப்பன்றி இறந்த நிலையில் இருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார் ஹில்வியூ குடியிருப்புவாசி திரு வாட்டி அனிதா ஸ்ரீநிவாசன், 38. "இது குடியிருப்புப் பகுதி என்பதால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது விசித்திரமாக உள்ளது. என் குழந்தைகள் அதிகாலையில் பள்ளிக்குச் செல் கின்றனர்; இரவில் வீடு திரும்புகின் றனர். இங்குள்ள நடைபாதையில் விளக்குகள் எப்போதும் மங்கலா கவே எரிவதால் விலங்குகளைப் பார்ப்பது சிரமம். அதனால் சற்று பயமாகத்தான் இருக்கிறது," என்றார் அவர்.
காயமடைந்த 44 வயது ஆடவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்