சிங்கப்பூரின் வளர்ச்சிக்குக் கடந்த 53 ஆண்டுகளாகப் பொறி யியல், தொழில்நுட்பம், கணிதம் போன்ற துறைகள் முக்கிய பங்கு அளித்து வந்துள்ளபோதிலும் கலைகள் மற்றும் மனிதவியலின் முக்கியத்துவமும் அதிகரித்து வருவதாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார். "தொழில்நுட்பத்துடன் கலை கள் இணையும்போது சிறந்த யோசனைகள் மலரும். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது நல்ல தரமான யோசனைகள் கிடைக்கும்," என்றார் திரு ஹெங். 'ஆல் பாசிபல் பாத்ஸ்; ரிச்சர்ட் ஃபேன்மன்ஸ் கியூரியற் லைஃப்' எனும் தலைப்பில் கலைகள் அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஹெங், கலைகளும் கலாசாரமும் நாட்டின் முக்கியமான அம்சம் என்று விவரித்தார்.
அவை மக்களுக்கு ஊக்கு விப்பாக இருப்பதாகவும் சமூ கத்தை வடிவமைக்க உதவுவதாக வும் அவர் தெரிவித்தார். "கலைகள், சமூக அறிவியல், மனிதவியல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தற்போது அடை யாளம் காணப்படுகிறது,"என்றார் அமைச்சர். எளிதில் புரிந்துகொள்ள முடியாத அறிவியல் குறிப்புகளை எளிமையான படக்காட்சிகளைக் கொண்டு மற்றவர்களுக்குப் புரிய வைத்த நோபெல் பரிசு வென்ற ரிச்சர்ட் ஃபேன்மனின் பணிகளை அமைச்சர் ஹெங் சுட்டினார்.
லெகோ இருவழித் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்திப் பார்க்கும் அமைச்சர் ஹெங் சுவீ கியட் (நடுவில்). கண்காட்சியில் லெகோ பிளாக்ஸைப் பயன்படுத்தி அணுக்களையும் தனிமங்களையும் உருவாக்க கற்றுத் தரப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்