இவ்வாண்டுக்கான கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் அனை வரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய குடிமைத் தற்காப்புப் படையினர் முயற்சிகளை எடுத்து வருகின் றனர். பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்லும் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை பெருகிவர, தீச்சம்பவங்கள் தொடர் பான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை குடிமைத் தற் காப்புப் படை துரிதப்படுத்துகிறது. நேற்று முன்தினம் இரண்டு கடைத்தொகுதிகளும் ஐந்து கேளிக்கை விடுதிகளும் சோதனை செய்யப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
பழுதுகள் உள்ள வெளிவாயில் விளக்குகள், நடைமேடைகளிலும் வெளிவாய்க் கதவுகளிலும் இடை யூறுகள் உள்ளிட்ட சில பிரச்சி னைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தீப் பாதுகாப்பு விதிமுறைகளை இவை மீறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய விதி மீறல்கள் தீச் சம்பவத்தின்போது ஆபத்துகளை விளைவிக்கலாம் என்றும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இவை தடைகளாக இருக்கக்கூடும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அவசர காலங்களில் முக்கியமாக இருக்கும் வெளிவாயில் பதாகைகளைக் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை