அறைகலன் கிடங்கில் கட்டுக்கடங்காத தீ; பெரும் போராட்டத்திற்குப் பின் அணைப்பு

சுங்கை காடுட்டில் உள்ள அறைகலன் கிடங்கு ஒன்றில் நேற்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 90 பேர் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

சுங்கை காடுட்டில் உள்ள அறைகலன் ஆலையில் நேற்று அதிகாலை தீச்சம்பவம் நேர்ந்தது. 31 சுங்கை காடுட் ஸ்திரீட்டில் நடந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல் பின்னிரவு 3 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அறைகலன் ஆலை முழுவும் தீ பரவியிருந்ததை அங்கு சென்றிருந்த தீயணைப்பு அதிகாரிகள் கண்டனர். உடனே தனது படையினர் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். "இதில் மொத்தம் 25 அவசரகால வாகனங்களுடன் சுமார் 90 தீயணைப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். நீரைப் பீய்ச்சியடிக்கும் 12 சாதனங்கள் பயன்படுத்தப்பட் டன. நான்கு மணி நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட் டது," என்று படை குறிப்பிட்டது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!