எஸ்.வெங்கடேஷ்வரன்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக் கான ஒளியூட்டு நேற்று இரவு கேம்பல் லேனில் நடைபெற்றது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மர புடைமைச் சங்கத்தின் (லிஷா) ஏற்பாட்டில் 11வது முறையாக நடைபெற்ற விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ இரவு 8 மணியளவில் ஒளியூட்டி சிறப்புச் செய்தார். அதனைத் தொடர்ந்து லிட்டில் இந்தியா வட்டாரம் பல வண்ண விளக்கொளியில் மின்னத் தொடங்கியது. பண்ணை விலங்கு கள் ஊர்வலம், விற்பனைச் சந்தை, அலங் காரங்கள் என்று பொங்கலை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இவ்வாண்டின் ஒளியூட்டு விவசாயத் தையும் விவசாயிகளையும் கருப்பொருட் களாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிராங்கூன் சாலையில் பலவித ஒளி அமைப்புகளுடன் 32 தோரணங்கள் அமைக்கப்பட் டுள்ளன.
நேற்று தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மெத்தம் 31 நாட்களுக்கு இந்த ஒளியூட்டு நீடிக்கும்.
லிட்டில் இந்தியாவின் நிகழ்ச்சிகள் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டுவதாகக் குறிப்பிட்டார் லிஷாவின் கௌரவ செயலாளர் திரு ருத்திராபதி. இவ்வாண்டின் ஒளியூட்டு கரும்பு, பானை கள், பண்ணை விலங்குகள், கோல வடிவங்கள் போன்ற பொங்கல் பண்டிகை சார்ந்த சின்னங்களோடு காட்சியளிக்கும் என்றும் ஒளி அமைப்புகள் சிராங்கூன் சாலையிலிருந்து கிட்சனர் சாலை வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.