லிட்டில் இந்தியாவில் களைகட்டிய பொங்கல்

ப. பாலசுப்பிரமணியம்

பலருக்கும் நேற்று வழக்கமான வேலை நாள் என்றாலும், தைப் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக லிட்டில் இந்தியாவில் கடை கடை யாய் ஏறி இறங்கினர் மக்கள். குறிப்பாக லிட்டில் இந்தியா கேம்பல் லேன் சாலையிலுள்ள பொங்கல் சந்தையில் பண்டிகைக் குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க நேற்று பிற்பகலிலிருந்து அங்கு கூட்டம் வந்து குவிந்தது. காய்கறிகள், பழங்கள், மலர் கள், கரும்புகள், வாழையிலைகள், மாவிலைகள், இனிப்புப் பலகாரங் கள், பொங்கல் பானைகள், புத் தாடைகள் என அனைத்துமே ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அச்சந்தை அமைந்திருந்தது.

பொங்கல் சந்தைக்கு வருவதற் காக வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு மனைவியுடன் நேற்று பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க வந்திருந்தார் கணினித் துறையில் பணியாற்றும் 45 வயது திரு திருமேனி மாரிமுத்து. தாம் வசிக்கும் சிராங்கூன் வட்டாரத்தில் இந்திய மளிகைக் கடைகள் இருந்தாலும், குறிப்பிட்ட சில சமையல் பொருட்களுக்கு லிட்டில் இந்தியாவுக்கு வரவேண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொங்கல் பண்டிகை உணர் வைச் சந்தை வெளிக்கொணர்ந்து வருவதாகக் கூறிய அவர், தம் இரு மகள்களையும் கடந்த சனிக் கிழமை இங்கு அழைத்து வந்து பொங்கல் கொண்டாட்டங்களின் பின்னணியை விளக்கியதாகச் சொன்னார்.

பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கடைசி நேரத்தில் லிட்டில் இந்தியாவிற்கு வந்து குவியும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!