வைதேகி ஆறுமுகம்
தமிழில் வாசிக்கும் நாட்டத்தைச் சிறார்களிடம் வளர்க்க உறு துணையாக கனியும் மணியும் மின்னூல் செயலி வடிவில் வருகை தந்து இருக்கிறார்கள். தமிழை வாசிக்கத் தெரியாத பிள்ளைகளுக்குச் சொற்களை அறிமுகப்படுத்தும் வகையில், 'கனியும் மணியும்' என்ற அந்த மின்னூல் செயலியில் தெளிவான குரலில் கதைகளைக் கேட்கலாம். குழந்தைகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் வகையில் அசைவுப் படங்களுடன் இக் கதைகள் உள்ளன. கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு- வின் தலைவரான திரு விக்ரம் நாயர், சிறுவர்களுக்கான ஆறு தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்டுள்ள இம்மின்னூல் செயலியை நேற்று வெளியிட்டார்.