காந்திநகரில் இருந்து இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு இன்னும் வலுவடையும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளியல் வலுவான வளார்ச்சி கண்டு வருவதாகவும் அதற்கு குஜராத் உந்துதலாக விளங்குவதாகவும் அவர் கூறினார். குஜராத் தலைநகர் காந்திநகரில் 'துடிப்புமிக்க குஜராத்' அனைத்துலக உச்சநிலை மாநாட்டை திரு மோடி நேற்று தொடங்கிவைத்தார். முதல்நாள் இரவு சிங்கப்பூர் பேராளர் குழுவை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடைபெற்றது. குஜராத் மக்களின் நேர்த்தி யான வேலை கலாசாரம் தொழில் துறைகளுக்கு ஏற்ற சிறப்பான அம்சம் எனக் குறிப்பிட்ட திரு மோடி, குஜராத்தில் முதலீடு செய்யும்படி சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
'