பேருந்து-லாரி மோதல்: 13 பயணிகள் காயம்

சிங்கப்பூரின் பைனியர் ரோட்டில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையிலும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை யிலும் அனுமதிக்கப்பட்டதாக போலிசார் கூறினர். கொள்கலன் லாரியுடன் பேருந்து மோதியதால் பேருந்தில் இருந்தவர்கள் காயமடைந்தனர். துவாஸ் கிரசென்டை நோக்கிய சாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக தங்களுக்கு மாலை 5.12 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். 13 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் பேருந்து ஓட்டுநர் காயமின்றித் தப்பிய தாகவும் நம்பப்படுகிறது.

லாரிக்கு முன்னால் சென்றுகொண் டிருந்த வாகனம் திடீரென்று நின்றதால் லாரி ஓட்டுநரும் தமது வாகனத்தை சட்டென்று நிறுத்த நேரிட்டது. அதன் விளைவாக, பின்னால் வந்துகொண்டு இருந்த பேருந்து, லாரி மீது மோதியது. இந்த எதிர்பாராத விபத்தின் காரணமாக பேருந்தின் முன்பக்கம் பலமாகச் சேதமடைந்தது. அதன் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்ததைக் காட்டும் படம் ஒன்றை சீன நாளிதழான '‌ஷின் மின்'னின் வாசகர் ஒருவர் அனுப்பி இருந்தார். அவ்வழியாகக் கடந்து சென்று கொண்டு இருந்த ஒருவர் விபத்தை அறிந்ததும் முதலுதவி செய்ய முன்வந்த தாக உதவியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் '‌ஷின் மின்'னிடம் கூறினார். விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!