வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்ற ஆதரவுடன், புக்கிட் பாஞ் சாங் குடிமக்கள் ஆலோசனைக் குழுவும் புக்கிட் பாஞ்சாங் ஒருங் கிணைப்பு மற்றும் இயல்புரிமைக் குழுவும் சேர்ந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா நேற்று இரு சாதனைகள், ரத்த நன்கொடை ஆகியவற்றுடன் நல்லிணக்கப் பெருவிழாவாக நடந்தது. புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் 12வது முறையாக ஏற்பாடு செய்யப் பட்ட அந்த விழாவில், புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி உறுப் பினரும் வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்ற மேயருமான டாக்டர் டியோ ஹோ பின் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டார்.
குடியிருப்பாளர்கள் சுமார் 2,000 பேர் சூழ்ந்திருந்த அந்த நிகழ்ச்சியில், சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் சுண் ணாம்புக்குச்சிகளைக் கொண்டு பல வண்ணங்களில் 200 கோலங் களை வரைந்தார்கள். பலகைகளில் மாடுகளைச் சித்திரிக்கும் 200 ஓவியங்கள் வரையப்பட்டு புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த இரண்டு சாதனைகள் ஒருபுறம் இருக்க, நேற்றைய விழா சிங்கப்பூரின் 200வது ஆண்டைக் குறிப்பதாகவும் அமைந்தது.
டாக்டர் டியோவின் ஆலோ சனைப்படி இந்த ஆண்டு விழாவை சிங்கப்பூரின் 200வது ஆண்டு கொண்டாட்ட பொங்கல் விழாவாக வும் ஏற்பாடு செய்ததாக இந்நிகழ்ச் சியின் ஏற்பாட்டுக் குழுத் தலை வரும் புக்கிட் பாஞ்சாங் ஒருங் கிணைப்பு மற்றும் இயல்புரிமைக் குழுத் தலைவருமான திரு பெரு மாள் மூர்த்தி கூறினார்.