நேரடி இசையோடு இனிதே நடந்தேறிய தைப்பூசத் திருவிழா

தைப்பூசம் குறித்து சென்ற ஆண்டு நடந்த கலந்துரையாடல் கருத்துகளின் மூலம் இந்த ஆண்டு காவடி ஊர்வலத்தோடு நேரடி இசையை அனுமதித்தது பலருக்கும் மனதிருப்தி தந்தது என்றும் நல்ல ஆன்மிக அனுபவத்திற்கும் நல்ல காவடி அனுபவத்திற்கும் இடையே சட்ட, ஒழுங்கை சமநிலையாக பேண வேண்டியுள்ளது என்றும் கூறி உள்ளார் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம். நேற்று மாலை 3 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயி- லுக்கு வந்த அமைச்சர், பக்தர்களைச் சந்தித்ததோடு செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். "சென்ற ஆண்டு கருத்துக் கூறியவர்கள் இந்த ஆண்டு என்னைப் பார்த்து நன்றி தெரிவித்தார்கள். நான் என்ன சொன்னேன் என்றால், இது என்னைப் பற்றியது அல்ல," என்று கூறிய அமைச்சர், எவ்வளவு உதவ முடியுமோ, அந்த அளவிற்கு உதவுவோம் என்றார்.

"கொண்டாட்டங்களை மக்களுக்கு எந்த வகையில் சிறப்பாக நடத்த முடியும் என்பதுதான் நம் சிந்தனை, அதற்கு மக்களும் நல்ல கருத்துகளை வழங்குகிறார்- கள். இந்து அறக்கட்டளை வாரி யமும் இதில் ஈடுபடுகிறது. அர- சாங்கம் தொடர்ந்து ஒரு பங்காளியாக இருந்து உதவி செய்யும்," என்றார் அமைச்சர் சண்முகம். பெருமாள் கோயிலுக்குச் சென்றபின் நேரடி இசை வழங்கும் இடம் ஒன்றுக்கும் சென்று பார்வை- யிட்டு, பின் அருள்மிகு தெண்டாயுத பாணி கோயிலுக்கு நடந்து சென்றார் அமைச்சர் சண்முகம். கிட்டத்தட்ட 9,000 பக்தர்கள் நேற்றைய தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!