இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ; 14 பேர் மரணம்

ரஷ்யக் கடற்பகுதியில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் மாண்டுபோயினர். கிரைமியாவையும் ரஷ்யாவையும் பிரிக்கும் கெர்ச் நீரிணையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அவ்விரு கப்பல்களும் தான்சானியாவுக்குச் சொந்தமானவை. அவற்றுள் ஒரு கப்பல் திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றிச் சென்றதாகவும் மற்றொன்று எரி பொருள் கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றியபோது தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. 'தி கேண்டி' என்ற ஒரு கப்பலில் 17 பேர் இருந்தனர். அவர் களில் எட்டுப் பேர் இந்தியர்கள்; இதர ஒன்பது பேரும் துருக்கியர் கள். 'தி மேஸ்ட்ரோ' எனப்படும் இன்னொரு கப்பலில் இந்தியர்கள் எழுவர் உட்பட 15 பேர் இருந்தனர் என்று ரஷ்ய கடற்துறை சொன்ன தாக அந்நாட்டின் 'டாஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்களில் குறைந்தது 14 மாலுமிகள் உயிரிழந்துவிட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி நிறுவ னத்தின் செய்தி கூறியது. "அவற்றுள் ஒரு கப்பலில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின் தீ இன்னொரு கப்பலுக்கும் பரவியதாகவும் கருதப்படுகிறது," என்று ரஷ்யக் கடற்துறைப் பேச் சாளர் தெரிவித்தார்.

ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றும்போது தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!