சீன சிங்க நடனத்துடன் சன்டெக் சிட்டி சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் ஒன்பதாம் ஆண்டாக அனைத்துலக இந்திய விற்பனை விழா நேற்று தொடங்கியது. கண்காட்சிக் கூடம் 403, 404 இரண்டிலும் விற்பனை விழா நேற்று தொடங்கிய உடனேயே மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விற்பனை விழாவை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின்கீழ் வரும் தமிழ் முரசு, தப்லா ஆகிய செய்தித்தாட்களும் 'டி ஐடியாஸ்' நிறுவனமும் ஏற்று நடத்துகின்றன.
இந்த விழாவை அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கியதற்கு அடையாள மாக, எஸ்பிஎச் நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி டான், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவெத் அஷ்ரஃப், தமிழ் முரசு, தப்லா செய்தித்தாட்களின் ஆசிரியர் திரு ராஜேந்திரன், டி ஐடியாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்ணிமா காமத் ஆகியோருடன் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் அதிகாரிகளும் விழா மையத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
விழாவுக்கு வருகை புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர் களுக்கு மத்தியில் உரையாற்றிய சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவெத் அஷ்ரஃப், இந்த விழா ஆழமாகப் பதிந்து உள்ள இந்திய அடையாளத்தைக் கொண்டிருப்பதுடன் இந்திய நாட்டின் கலை, கலாசார, பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதாகக் கூறினார்.
மேலும், இந்தியக் குடியரசின் 70ஆம் ஆண்டு நிறைவையும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையும் இந்தியா, நாளை கொண்டாடும் நிலையில் இது தனிச்சிறப்பு வாய்ந்த ஆண்டாக விளங்கு கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் இந்தித் திரையுலகின் பிரபலமான புதிய நட்சத்திரமும் நடிகர் சையஃப் அலி கானின் மகளுமான சாரா அலி கான் விழாவுக்கு இன்று மாலை 5.30 மணியிலிருந்து வருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த விழாவுக்கு இணையம் மூலம் பதிவு செய்து தேர்வு செய்யப்படும் ஐந்து அதிர்ஷ்டசாலிகள் இவருடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெறுவர்.
சிங்கப்பூரில் அனைத்துலக இந்திய விற்பனை விழா
25 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 07:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!