சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட இருக்கும் புதிய குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடத்தின் முதற்கட்ட சீரமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட ரயில் பாதையின் நீளம் 29 கிலோ மீட்டர் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார். அந்தப் பாதை தற்போதைய சாங்கி, லோயாங், பாசிர் ரிஸ், ஹவ்காங், அங் மோ கியோ ஆகிய எம்ஆர்டி நிலை யங்களின் வழியாக அமையும் என்றும் வழிநெடுக 12 எம்ஆர்டி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறி னார். "குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித் தடப் பணிகள் 2029ஆம் ஆண்டில் நிறைவுறும்போது கிட்டத்தட்ட 100,000 குடும்பங்கள் சிறந்த போக்குவரத்து இணைப்பையும் குறைந்த பயண நேரத் தையும் பெறும்," என்று திரு கோ குறிப்பிட்டார். புதிதாக அமையவிருக்கும் பிரைட் ஹில் எம்ஆர்டி நிலையம் தாம்சன்= ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையிலும் இடம்பெறும் என்றும் அது காலப்போக் கில் குறுக்குத் தீவு வழித்தடத்தை உள்ளடக்கிய இணைப்பு நிலையமாக ஆக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு=தெற்கு, கிழக்கு=மேற்கு, வடக்கு=கிழக்கு ஆகிய வழித்தடங்க ளில் தற்போது காணப்படும் பயணி களின் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் அதிகம் பேர் மாறிச் செல் லக்கூடியதாக புதிய எம்ஆர்டி வழித் தடம் அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.
புதிய குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடத்தில் 12 நிலையங்கள்
26 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2019 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!