இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத் துக்குச் சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பாஜக அரசாங்கத்தை எதிர்த்து அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு புது டெல்லியில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட ஏறக்குறைய எல்லா எதிர்க்கட்சிகளின் ஆதர வுடன் போராட்டம் நடத்திய நாயுடு, பாஜக அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக வசை பாடினார்.
டெல்லியில் உள்ள ஆந்திர பவன் வளாகத்தில் நேற்று இரவு 8 மணி வரை சாப்பிடாமல் மேடை யிலேயே தன் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாயுடு, தனது கோரிக்கையை வலியுறுத்தி இன்று அதிபரை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல கட்சிகளின் பேராளர்கள் உண்ணாவிரத மேடைக்குச் சென்று நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
உண்ணாவிரதப் போராட்டத் தில் பேசிய நாயுடு, பிரதமர் நரேந் திர மோடி இந்தியாவை ஆள பொருத்தமற்றவர் என்று சாடினார்.
ஏற்கெனவே ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் ஆந்திர மக்களின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் மோடி, வெந்த புண்ணில் உப்பைத் தடவுவதுபோல் ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவின் குண்டூருக்குச் சென்று வாய் திறந்து இருக்கிறார் என்றார் திரு நாயுடு.
ஆந்திராவில் உரையாற்றிய மோடி, தெலுங்கு தேசத்தைத் தொடங்கிய என்டி ராமராவின் மருமகனான சந்திரபாபு நாயுடு, தன்னுடைய மாமாவின் முது கிலேயே குத்திவிட்டார் என்று பேசி இருந்தார். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைப்பதைவிட அதிக சலுகைகளை அந்த மாநிலத்திற்கு தமது அரசாங்கம் வழங்கி வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.
இதுபற்றி நேற்று புதுடெல்லி யில் கருத்து கூறிய நாயுடு, "உன் சுயமரியாதையை யாராவது தாக் கினால் அவர்களைச் சும்மா விடாதே. அவர்களுக்கு தக்க பாடம் போதித்துவிடு என்று என் னுடைய மாமா எனக்குப் போதித்து இருக்கிறார்.
"ஆகையால் மோடியை சும்மா விடமாட்டோம். அவருக்குச் சரி யான பாடம் புகட்டுவோம். டெல்லி யிலேயே உட்கார்ந்துகொண்டு தப்பிவிடலாம் என்று மோடி கனவு காண்கிறார். தோழமை கட்சிகளின் ஆதரவுடன் அவரை அகற்று வோம்," என்றார் திரு நாயுடு.
முதல்வர் சந்திரபாபு நாயுடு: நரேந்திர மோடி நாட்டை ஆள பொருத்தமற்றவர்
12 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2019 08:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!