எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி 157 பேரும் பலியாயினர்

அடிஸ்அபாபா நகரிலிருந்து நைரோபிக்குப் பறந்துகொண்டிருந்த எத்தியோப்பிய விமானம் நேற்றுக் காலையில் விபத்துக்குள்ளாகி விழுந்துவிட்டது என்று அந்த நாட்டின் பிரதமர் அகம்மது அறிவித்தார்.
அந்த விமானத்தில் 149 பயணிகளும் எட்டு விமான ஊழியர்களும் இருந்ததாகவும் பயணிகள் 33 நாடுகளைச் சேர்ந்த வர்கள் என்றும் யாரும் உயிர்பிழைக்க வில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
தலைநகர் அடிஸ்அபாபாவுக்கு 62 கி.மீ. தென்கிழக்கே இருக்கும் பிஃஷோது என்ற நகருக்கு அருகே அந்த போயிங் 737-800 மேக்ஸ் விமானம் விபத்துக்குள் ளாகிவிட்டது.
விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.44 மணிக்கு விபத்துக்குள்ளானது என்று தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத விமான நிறுவன பேச்சாளர் தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு எத்தியோப்பிய பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
"விமானம் கென்யா நாட்டின் நைரோபி நகருக்குப் பறந்துகொண்டிருந்தது. எதிர் பாராதவிதமாக திடீரென்று அது விபத் துக்குள்ளாகிவிட்டது. அந்த விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை பிரதமர் அலுவலகம் தெரிவித்துக்கொள் கிறது," என்று நேற்று அந்த அலுவலகம் டுவிட்டரில் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!