நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளி வாசல்களில் நேற்று நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 49 பேர் மாண்டனர். பலர் காயமுற்றனர்.
இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் தெரிவித்தார். தாக்குதலை அடுத்து, நியூசிலாந்தில் பாது காப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நிமித்தமாக நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கிறைஸ்ட்சர்ச் நகரெங்கும் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றுக் காவலில் ஈடுப்பட்டு வருகின் றனர்.
நேற்றைய தினத்தை நியூசி லாந்து வரலாற்றின் கறுப்பு தினங்களில் ஒன்று என்று பிரதமர் ஆர்டன் வர்ணித்தார்.
தாக்குதல்காரர்கள் பயன் படுத்தியதாகச் சந்தேகிக்கப் படும் வாகனங்களிலிருந்து இரு வெடிபொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவற்றை அதிகாரிகள் செயலிழக்கச் செய்ததாகவும் பிரதமர் ஆர்டன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவார்.
நியூசிலாந்து பிரதமர்: நாட்டின் கறுப்பு தினம்
16 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 09:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!