அறிவியல் புனைவுகள்

- சுனில் கிருஷ்ணன்

அறிவியல் புனைவுகளின் வளர்ச்சியை அறி வியல் வளர்ச்சியுடன் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலின் எல்லைகள் விரிய விரிய சாத்தியங்களும் விரிந்தன.

விடை காணமுடியாத புதிர் என இவ்வுலகில் ஏதுமில்லை எனும் அளவிற்கு அறிவியல் உச் சத்தை எட்டியது. நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புனைகதை என பிரான்கைன்ஸ் டீனை சொல்லலாம். ஓர் இயந்திர மனிதனை உருவாக்கி அவனுக்கு உயிரளிக்க முடியும் எனும் சாத்தியத்தின் துவக்க விதை. அங் கிருந்து இன்று செயற்கை நுண்ணறிவு வரை அறிவியல் புனைகதை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

அறிவியல் அனைத்தையும் வெற்றி கொள் ளும் எனும் நம்பிக்கை இருவிதமான புனைவு களங்களை உருவாக்கியது. மானிடன் உரு வாக்கும் அறிவியல் இயற்கைக்கு எதிராக திரும்பும்போது பேரழிவை உருவாக்கும். அறி வியல் வளர்ச்சி பேராசையுடன் பினையும்போது என்ன நிகழும் என்பது முதன்மை கேள்வி. ஊழிக் காலம் குறித்த மத/பண்பாட்டு நம்பிக் கைகள் சேர்ந்து ஊகப் புனைவுகளை உருவாக் கின. பின்னை ஊழிக்கால (post apocalypse) புனைவுகள் அறிவியல் புனைவுகளில் மிக முக்கியமான வகைமை. கற்பனையின் வலுவில் ஒரு எதிர்காலத்தை உருவாக்கி, மானுட வாழ்வில் சாரமென எவை எஞ்சும் எனும் வினாவை நோக்கி விரிபவை. மற்றொரு வகைமை என்பது அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மானுடத்தை எவ்வகையில் எல்லாம் பாதிக்கும்? அதை எதிர்கொள்ள மேலதிகமாக என்னவிதமான தொழில்நுட்பத்தை நாம் கையில் எடுக்கவேண்டும் எனும் கேள்வியை நோக்கி பயணிப்பது. அறிவியலின் மீது நன்னம்பிக்கை கொண்ட தரப்பு என இதை சொல்லலாம்.

ஊகப் புனைவு (speculative fiction), டிஸ்டோபியன் புனைவுகள் அறிவியல் புனைவு களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை. சிறந்த உதாரணம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984.

இந்நாவலை 1949 ஆம் ஆண்டு எழுதியிருக் கிறார். இன்று அந்நாவலை வாசிக்கும்போது தீர்க்கதரிசனம் போல் இருக்கும். ஊகப் புனைவு வரலாறை கேள்விக்குள்ளாக்கி மறு பரிசீலனை செய்யும் தன்மை கொண்டது. ஒரு வேளை ஹிட்லர் இரண்டாம் உலக போரில் வென்றிருந்தால் உலக வரலாறு என்னவாக இருந்திருக்கும்? இவ்வகையான புனைவுகள் அரசியல் அதிகாரம் பற்றிய பிரக்ஞையில் எழுபவை. அறிவியல் அற்புதங்கள் முற்கால சமூகத்தில் மாயங்கள் மீதான நம்பிக்கையை இல்லாமல் ஆக்கின. இணையாக அறிவியல் புனை கதைகள் முற்கால தேவதை கதைகளின் நீட்சியாக நிலைகொண்டன. ஹெச். ஜி வெல்ஸ் 'கால யந்திரம்' பற்றிய கற்பனைகளை ஐன்ஸ்டீனுக்கு 50 ஆண்டுகள் முன்னரே செய்கிறார். ஐன்ஸ்டீனின் வருகையும் சார்பியல் கோட்பாடும் க்வாண்டம் இயற்பியலும் அறி வியலில் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தியதோ அதேயளவு அறிவியல் புனைவுகளின் களத் தையே மாற்றியமைத்தன. இணை பிரபஞ்சம், காலப் பயணம், வேற்றுகிரக உயிரிகள் என அதன் பரப்பு விரிந்தது. உயிரி தொழில்நுட்பம், மரபணுவியல் வளர்ச்சி புதிய புதிய புனைகதை சாத்தியங்களை உருவாக்கி அளிக்கின்றன.

பொதுவாக புனைவுகளை எழுதும்போது எழுத்தாளர் அறுதியான தீர்மானத்துடன் எழுதுவது கலைத்தன்மை அடையாமல் போவ தற்கான வாய்ப்பு அதிகம். வரலாற்று புனைவிற் கும் அறிவியல் புனைவிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டிலும் எழுத்தாளன் ஒரு கருத்தை பின்தொடர்வது அனுமதிக்கப்பட்டிருக் கிறது. உண்மையில் அறிவியல் புனைவு ஒரு கற்பனையான சூழலில் என்ன நிகழும், எப் படியிருக்கும் எனும் கேள்வியாகவே உதிக்கும். அறிவியல் புனைவு 'what if' எனும் கேள்வியை பின் தொடர்ந்து உருவாவது என சுருக்கமாக சொல்லலாம். கற்பனையின் ஆற்றலே அறி வியல் புனைவின் மிக முக்கிய கூறு.

அறிவியல் புனைவு மேற்கிலக்கியத்தில் தனக்கென தனித்த வாசிப்பு பரப்பைக் கொண் டது. ஐசக் அசிமோவ், மைக்கேல் க்ரிச்டன் என பெரும் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத் தும் துறை. முந்தைய காலங்களில் மைய இலக்கிய வாசகர்கள் பெரும்பாலும் அறிவியல் புனைவை தூய இலக்கியமாக ஏற்றது இல்லை. ரே பிராட்பரி போன்றோர் விதிவிலக்கு. கிரகாம் கிரீன், உம்பர்தோ எகோ, ஓரான் பாமுக் போன்றோர் நவீன இலக்கியத்தின் இறுகிய எல்லையை தொடர்ந்து உடைத்தார்கள். பின் நவீனத்துவ அலை வலுவானதும் அறிவியல் புனைவும் மைய இலக்கியம் நோக்கி நகர்ந்தது. அறிவியல் அழிவைத்தரும், அறிவியல் மானுட மீட்புக்கான சாதனம் எனும் இரு எல்லைகளில் தொடர்ந்து அறிவியல் புனைவுகளை எழுதும் நிலையைக் கடந்து, அறிவியலின் இன்றியமையாத இருப்பை அங் கீகரித்து அது உருவாக்கக்கூடிய நவீன வாழ் வின் புதிய சிக்கல்களை, கேள்விக்குள்ளாக்கும் மதிப்பீடுகளை நோக்கி தற்கால அறிவியல் புனைவுகள் நகர வேண்டும்.

தற்கால தலை சிறந்த அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் என டெட் சியாங், சார்லஸ் யு, கென் லியு ஆகியோரைச் சொல்வேன். இவர்கள் மூவரும் கிழக்கு- மேற்கு என இரண்டு பண்பாடுகளும் உராயும்போது உரு வானவர்கள். பவுத்த மெய்யியல் பின்புலத்தை அறிவியலோடு இணைத்து அறிவியல் புனை வின் எல்லைகளை புதிய உயரங்களுக்குஎடுத்து சென்றவர்கள். இந்திய இலக்கியம் இவர்களையே முன்னோடிகளாகக்கொள்ள வேண்டும்.

அறிவியல் புனைவின் மீது மைய இலக்கிய போக்கு முன்வைக்கும் விமர்சனம் என்பது துவக்க நிலையில் வாசகனுக்கு அதன் முதற் கோள் (hypothesis) அளிக்கும் ஆச்சரியத் திற்கு அப்பால் எதையும் அளிப்பதில்லை என் பதே. அறிவியல் புனைவோ, மிகு புனைவோ அது இலக்கியமாக ஆவது வாழ்வைப் பற்றிய பார்வைகளை அளித்து, அறக் கேள்விகளை எழுப்பி, மெய்யியல் விசாரணையாக பரிணமிக் கும்போது மட்டுமே. ஜெயமோகனின் 'விசும்பு' மேற்கண்ட இதே வரிசையில் இந்திய மரபையும் நவீன அறிவியலையும் இணைக்கும் புள்ளியில் உருவான ஒரு முன்னோடி முயற்சி என சொல்லலாம். சுஜாதாவின் கதைகள், சுதாகர் கஸ்தூரியின் 6174, 7.83hz ஆகிய இரு நாவல்கள் தவிர்த்து அங்கொன்றும் இங் கொன்றுமாக வெகு சில அறிவியல் புனைவு கதைகளே தமிழில் எழுதப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் எழுதுவதற்கு எத்தனையோ களங்கள் இன்னும் காத்திருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!