சிங்கப்பூரர்களிடையே உள்ள சமத்துவ மின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு முரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண் டும்: சுதந்திரம் அடைந்தபோது சிங்கப்பூரில் பெரும்பான்மை மக்கள் பொருளியல் நிலை யைப் பொறுத்தவரை தாங்கள் வறுமையை ஓரளவு சமமாகப் பங்கிட்டுக் கொண்டதாக உணர்ந்தனர். அந்தநிலை உண்மையில் வரவேற்கக் கூடியநிலை இல்லை என்பதோடு அந்த நிலை யைச் சரிசெய்ய அரசு பொருளியல் வளர்ச்சி, பொது வீடமைப்பு, ஓய்வுக்கால சேமிப்பு, ஏறுமுக வரிவிதிப்பு, அதன் தொடர்ச்சியாக பொருளியல் வளத்தை மக்களிடையே பகிர்ந்த ளிப்பது என பல தீவிரமான கொள்கைகளைச் செயல்படுத்தியது. இதன் பலனாக வறுமைநிலை வெகு விரைவாக வீழ்ச்சி கண்டது. ஆனால், உலக மயமான பொருளியல் சூழலில் ஏற்பட்ட வாய்ப்புகளைக் கொண்டு சிலர் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் பலனடைந்ததால் காலப் போக்கில் மக்களிடையே இல்லாமை உணர்வு மீண்டும் தலைதூக்கியது. உலகமயமாதல் உலக நாடுகளை ஒரே பொருளியலாக ஒன்றிணைத்ததன்வழி வளர்ச்சிக்கான சாத்தியங்களைப் பெருக்கி யுள்ள அதேவேளையில் ஒரு நாட்டுக்குள் நிலவக்கூடிய சமத்துவமின்மையை அதிகரித் துள்ளது. இந்தச் சமத்துவமின்மை பிரச்சினை குறித்து அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தங்கள் உரையில் பல நாடாளுமன்ற உறுப்பி னர்கள் விவாதித்தனர்.
முரசொலி - ஞாயிறு 20.5.2018
20 May 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 May 2018 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!