முரசொலி - ஞாயிறு 27.5.2018
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இளையர், முதியோருக்கிடையே ஒருவர் மற்றவரின் எண்ணங்கள், உணர்வு களுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்க வேண்டியுள்ளது. சிங்கப்பூரின் எதிர்கால நலனுக்காக இளைய சமுதாயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ள அதேவேளை யில் முதியோரையும் பராமரிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரில் 10 பத்தில் ஒருவருக்கு மறதி நோய் உள்ள நிலையில், இந்தப் பிரிவினர் மீது சிறப்பு கவனிப்பு செலுத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் இந்தப் பிரிவினரின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேலாக 103,000ஐ தொடும் என்பது குறிப்பிடத்தக்கது. மறதிநோயால் அவதிப்படும் முதியோருக்கு உதவ தற்பொழுது ஆறு சமூக நட்பு வட்டங்கள் உள்ளன. அத்துடன், இதுபோன்ற மேலும் ஒன்பது வட்டங்களை உருவாக்கும் திட்டமும் உள்ளது.