தற்போது 'பாகுபலி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அதில் கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. எனினும், கௌரவ வேடத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒத்துக்கொண்ட விவரம் இனிமேல்தான் வெளியாக இருக்கும் நிலையில் அவர் ஹாலிவுட் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டு இருக்கிறார். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ராணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங் கள் நடித்த பாகுபலி படம் இரு பாடகங்களாகத் தயாரிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'பாகுபலி'. தெலுங்கில் தொடர் வெற்றிப் படங்களை இயக்கி வரும் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியான இப்படம், அதிக பொருட் செலவில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையோடு வெளியாகி, அதிக வசூல் ஈட்டிய முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது.
இந்நிலையில், சிறந்த படத்திற்கான தேசிய விருதை 'பாகுபலி' வென்றுள்ளது. 63வது தேசிய விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த படத்திற்கான தேசிய விருது 'பாகுபலி' படத்திற்கு அறிவிக்கப் பட்டது. சிறந்த இயக்குநராக சஞ்சை லீலா பன்சாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'பஜீராவோ மஸ்தானி' படத்திற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது 'பிக்கு' படத்திற்காக அமிதாப்பச்சனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது 'தானு வெட்ஸ் மானு' படத்திற்காக கங்கனா ரணாவத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.