உற்சாகத்துடன் தமிழில் நடிக்க சில கதைகளைக் கேட்டு வருகிறாராம் நாகார்ஜுனா. "இந்த படத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. கார்த்தியுடன் நடித்த இந்த படம் எனக்கு நல்ல அனுபவத்தை தந்துள்ளது. கார்த்தியின் விருப்பப்படி இதில் பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறேன்.
"திரையுலகிற்கு வந்து 30 ஆண்டு கள் ஆகிவிட்டது. திரை விமர்சகர்கள் 'தோழா' படத்துக்கு உண்மையான விமர்சனத்தை அளித்துள்ளனர். கார்த்தியுடன் நடித்த பிறகு உற்சாகமாக எழுந்து ஓட வேண்டும் போல் தோன்றுகிறது. கார்த்தி சினிமாவை மிகவும் நேசிக்கிறார். சினிமாவுக்கான அவரது உழைப்பு மீண்டும் எனக்குள் ஒருவித வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
'தோழா' படப்பிடிப்பின் போது நாகார்ஜுனா, தமன்னா, கார்த்தி