நடிகை பிரியாமணியும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. "கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் நானும் முஸ்தபாவும் சந்தித்துப் பேசினோம். முதலில் நண்பர்களாக இருந்தோம். பிறகு காதலர்களானோம். எங்கள் பெற்றோர் காதலை ஏற்றுக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் எங்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு நடக்கிறது.
"29ஆம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்," என்று பிரியாமணி சொன்னார்.