நடிகைகள் இருவரின் காதல் வாழ்க்கையை அவர்களது முன்னாள் காதலர்கள் சினிமாவாக எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களது அந்தரங்க வாழ்க்கை படமாக வந்தால் சினிமாவில் தங்களது மார்க்கெட் என்னவாகுமோ என்று அந்நடிகைகள் பயந்துபோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ரா மூன்று முறை தற்கொலைக்கு முயன்றார் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் வெளியானது. இச்செய்தியை வெளியிட்டவர் பிரியங்காவின் முன்னாள் மேலாளர் பிரகாஷ் ஷாஜு.
பிரியங்காவுக்கு ஆபாச செய்தி அனுப்பிய குற்றத்திற்காக 67 நாட்களை சிறையில் கழித்தவர் இவர். அண்மைய தகவல், இவரது 67 நாள் சிறை அனுபவத்தையும் பிரியங்காவின் வாழ்க்கையையும் திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் பிரியங்கா சோப்ராவின் முன்னாள் காதலர் அசீம் மெர்ச்செண்ட் என்பதுதான்.
பிரியங்காவின் அந்தரங்கத்தை சினிமா என்ற பெயரால் அம்பலப்படுத்துவதுதான் இந்தப் படத்தின் நோக்கம். இந்தப் படத்தைத் தயாரிக்கக்கூடாது எனத் தடை செய்யக் கோரி பிரியங்கா சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நயன்தாராவும் இதேபோல் ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபுதேவா தயாரிப்பில் ஏ.எல்.விஜய் ஒரு படத்தை இயக்குகிறார். 'காந்தா' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகிறது.
தெலுங்கில் இப்படத்தின் பெயர் 'அபினேற்றி'. அப்படியென்றால் நடிகை என்று பொருள். காந்தா என்பது 'ரத்தக்கண்ணீர்' படத்தில் எம்.ஆர்.ராதாவை ஏமாற்றிவிட்டுச் செல்லும் பெண்ணின் கதாபாத்திரம். எனவே, நயனின் முன்னாள் காதலர் பிரபுதேவா தயாரிக்கும் இப்படத்தின் மூலம் நயன்தாராவின் வாழ்க்கையைத்தான் படமாக எடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.