தனி நாயகியாக நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

'அட்டகத்தி', 'ரம்மி', 'காக்கா முட்டை' உள்ளிட்ட படங்களில் யதார்த்தமான பாத்திரங்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிப்புக்காக பாராட்டுகள் குவிந்தாலும் பட வாய்ப்புகள் தேடி வரவில்லை. ஒரு சில நடிகர்களின் சிபாரிசால் ஒன்றிரண்டு படங்கள் வந்தன. அதன் பிறகு வீட்டில்தான் இருக்கிறார். இந்நிலையில், 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படத்தில் தனி நாயகியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டவர் ஐஸ்வர்யா. அப்படத்தில் அதிரடியாக ஆட்டம் ஆடியும், சுறுசுறுப்பாக நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்ததையடுத்து அம்மணியின் மவுசு கூடி இருக்கிறதாம். 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை', 'மனிதன்' போன்ற படங்களில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். எனினும், இதுவே தொடர் கதையாகி விடக்கூடாது என்பதால் அடுத்தடுத்து வரும் படங்களில் தனி நாயகியாக மட்டுமே நடிப்பேன் என கறாராகக் கூறிவிடுகிறாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!