'அட்டகத்தி', 'ரம்மி', 'காக்கா முட்டை' உள்ளிட்ட படங்களில் யதார்த்தமான பாத்திரங்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிப்புக்காக பாராட்டுகள் குவிந்தாலும் பட வாய்ப்புகள் தேடி வரவில்லை. ஒரு சில நடிகர்களின் சிபாரிசால் ஒன்றிரண்டு படங்கள் வந்தன. அதன் பிறகு வீட்டில்தான் இருக்கிறார். இந்நிலையில், 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படத்தில் தனி நாயகியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டவர் ஐஸ்வர்யா. அப்படத்தில் அதிரடியாக ஆட்டம் ஆடியும், சுறுசுறுப்பாக நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்ததையடுத்து அம்மணியின் மவுசு கூடி இருக்கிறதாம். 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை', 'மனிதன்' போன்ற படங்களில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். எனினும், இதுவே தொடர் கதையாகி விடக்கூடாது என்பதால் அடுத்தடுத்து வரும் படங்களில் தனி நாயகியாக மட்டுமே நடிப்பேன் என கறாராகக் கூறிவிடுகிறாராம்.
தனி நாயகியாக நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்
21 Apr 2016 07:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!