ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் அனைத் தும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தற்போது 'முண்டாசுப்பட்டி' இயக்குநருடன் இணைந்து 'ராட்சஷ'னாக மாறியுள்ளார். 'புகழ்' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தைத் தொடர்ந்து ஜெய் நடிப்பில் 'தமிழ் செல்வியும் தனியார் அஞ்சலும்' படம் முடிவடைந்து வெளியீடு காண தயாராக உள்ளது. அதைத் தொடர்ந்து 'சென்னை 600028' இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், 'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம்குமார் இயக்கும் புதிய படத்திலும் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு 'ராட்சஷன்' என வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் சி.வி.குமார் தயாரிக்கிறார். ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு, மூன்று படங்கள் சரிவர வெற்றியை பெறவில்லை. இதனால், தனது அடுத்து படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்.