'சென்னை டூ சிங்கப்பூர்' புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம். இது ஒரு சிங்கப்பூர், இந்தியா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞனை அந்த நாடு எப்படி பாதுகாத்து வேலை வாய்ப்பளித்து வாழ வைக்கிறது என்பதுதான் கதை. சிங்கப்பூருக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள உறவு சிங் கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர் களின் பங்கு உள்ளிட்ட பல அம்சங்கள் படத்தில் இடம் பெறுகின்றன. கோகுல் ஆனந்த், அஜு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், சிவா, ஜாஸ் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அப்பாஸ் அக்பர் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார், கார்த்தி நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், சீனா, இங்கிலாந்து இந்தியா என 6 நாடுகளில் வெளியிடப்படுகின்றன.
இசையமைப்பாளர் ஜிப்ரான்