நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பிரமாதமாக கொண்டாடியுள்ளனர். தேவையற்ற அலட்டல்கள், ஆரவாரமின்றி ரத்ததானம், அன்னதானம் என ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்துள்ளனர். நேற்று முன்தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கார்த்தி. வழக்கமாக தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வருபவர், இந்த ஆண்டும் ரசிகர் மன்றம் மூலம் அந்த நல்ல காரியத்தைச் செய்துள்ளார். கார்த்தி பிறந்தநாளை யொட்டி, அவரது ரசிகர் மன்றம் மூலமாக சென்னை அரசு மருத்துவமனைக்கு 200 போர்வைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அங்கேயே ரசிகர்கள் ரத்ததானம் செய்த னர். பின்னர் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சென்னை திருவான்மியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேநேரத்தில் பாடி பகுதியில் உள்ள கோவிலில் பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக் கப்பட்டிருந்தன. ரசிகர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் குறித்து 'காஷ்மோரா' படப்பிடிப்பில் இருந்தபடி கைபேசியில் விவரங் களைக் கேட்டறிந்தபடியே இருந்தா ராம் கார்த்தி. மேலும், பொது மக்களுக்கு இடையூறு இன்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். முன்னதாக, தனது பிறந்தநாளை 'காஷ் மோரா' படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் கார்த்தி. அப்போது, நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பல்வேறு திரையுலகக் கலைஞர்களும் கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்தனர்.