தாமதமாக வந்தார்: நீக்கப்பட்ட அஞ்சலி

நடிகை அஞ்சலி படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் அதிருப்தி அடைந்த படக்குழுவினர் அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்குப் படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக் கிறார் அஞ்சலி. விஜய் சேதுபதி யுடன் 'இறைவி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கன்னடத்தில் தர்ஷன் ஜோடியாக நடிக்க 'சக்கர வர்த்தி' என்ற படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தனர். இந்தப் படத்தை சிந்தன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் தர்ஷன், அஞ்சலி நடிக்கும் காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டனர். இதற்காக அஞ்சலியை எதிர்பார்த்து துணை நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் காத்திருந்தனர். ஆனால் அஞ்சலி நீண்ட நேர மாகியும் வரவில்லை. இதனால் படக்குழுவினர் பொறுமை இழந் தனர். தயாரிப்பாளர் பணம் விரய மாவதாக புலம்பினார். பல மணி நேரத்துக்கு பிறகுதான் தாமதமாக அஞ்சலி வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த படக்குழுவினர் அஞ்சலியை அந்தப் படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்து அவரைப் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற்றிவிட்டனர். அஞ்சலிக்குப் பதில் நடிகை தீபா சன்னதியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஞ்சலி தரப்போ நியாயமான காரணங்களால்தான் தாமதமானது என்று கூறுகிறது. எது எப்படியோ, அஞ்சலி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 'இறைவி' படம் தனது சந்தை மதிப்பை உயர்த்தும் என உறுதி யாக நம்புகிறாராம் அஞ்சலி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!