தமிழில் 'பிசாசு' படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பிரயாகா மார்ட்டின். ஆனால் அந்தப்படத்தில் அவர் பேசுவதற்கு வசனங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. அதனால் அதில் அவர் பேயாக உலாவினார். அந்த வருத்தத்தில் தனக்குச் சொந்தக்குரலில் பேசுவதற்குக் கூட ஒரு வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டதே என நீண்ட நாட்களாக வருத்தத்தில் இருந்தார் பிரயாகா. ஆனால் அண்மையில் மலையாளத்தில் வெளியான 'ஒருமுறை வந்து பார்த்தாயா' படம் மூலம் அந்தக்குறை நீங்கியதால் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரயாகா.
அந்தப்படத்தின் இயக்குநர் சாஜனிடம், தனக்குச் சொந்தக்குரலில் பேச வாய்ப்புத் தருமாறும் அது ஒத்துவரவில்லை என்றால் 'டப்பிங்'கிற்கு வேறு ஆள் போட்டுக்கொள்ளுங்கள் எனவும் கோரிக்கை வைத்தாராம். இயக்குனரும் இதற்குச் சம்மதித்தாராம், இயக்குநர் சாஜன் கொடுத்த ஊக்கத்தில் முழுப்படத்திலும் சிறப்பாக டப்பிங் பேசி அசத்தினாராம். இப்போது தான் நடித்து வரும் 'பாவா' மற்றும் 'ஒரேமுகம்' ஆகிய படங்களிலும் தனது சொந்தக்குரலில் பேசப்போவதாக கூறியுள்ளார் பிரயாகா.