ப. பாலசுப்பிரமணியம்
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு நடிகர்கள் என தென் இந்திய நட்சத்திரப் பட்டாளத் தையே சிங்கப்பூருக்கு கொண்டு வருவது பெரிய காரியம். ஆனால், இந்தக் காரியத்தை நன்கு திட்ட மிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது 60 நபர்கள் அடங்கிய சைமா ஏற்பாட்டுக் குழு. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மிகப் பிரம்மாண்டமான முறையில் இரண்டு நாட்களாக சைமா நிகழ்ச்சியை துபாய் வேர்ல்ட் டிரேட் செண்டரில் நடத்திய அனுபவம் இக்குழுவினருக்கு உண்டு.
இந்நிகழ்ச்சியை 60% தென் இந்திய மக்களே தொலைக்காட்சி வழி பார்த்து ரசித்தனர். அதுவும் சன் தொலைக்காட்சி மூலம் 27 நாடுகளுக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இம்முறை 6,000 ரசிகர்களை உள்ளடக்கக்கூடிய சன்டெக் சிட்டி வளாகத்தில் 'ஹவுஸ்=ஃபுல்' வர வேற்பை எதிர்பார்ப்பதாக சைமா வின் தலைவர் திருமதி பிருந்தா பிரசாத் தெரிவித்தார். "நிகழ்ச்சி எப்படி விறுவிறுப்பாக இருந்தது என்பதை நாம் ஒளி வழியில் பார்த்திருப்போம். ஆனால், அதனை நேரில் பார்ப் பதிலோ ஒரு தனி சுகம் உள்ளது.
சைமாவின் தலைவர் திருமதி பிருந்தா பிரசாத்.