ப.பாலசுப்பிரமணியம்
சிங்கப்பூர் நயன்தாராவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 'சைமா' தென்னிந்திய திரைப்பட விருது நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம் இரண்டிலுமே சிறந்த நடிகை விருது பெற்றதோடு விக் னேஷ் சிவன் கையால் விருதை வாங்கியதில் நயன்தாராவுக்கு பெரு மகிழ்ச்சி. அவரது மகிழ்ச்சியில் அரங்கமே பங்கெடுத்து ஆரவாரித்தது. 'நானும் ரவுடிதான்' படத்திற்காக தமிழில் சிறந்த நடிகையாக விருது அறிவிக்கப்பட்டதோடு தன்னை நம்பி 'காதம்பரி' வேடத்தை தந்த விக்னேஷ் சிவனுக்கு முக்கியமாக நன்றி கூறினார்.
விருதை வழங்க ஸ்ரீபிரியா மேடையில் காத்திருக்க, விக்னேஷ் சிவன் கையால் விருதை வாங்க விரும்புவதாக அவர் கூற, அவர் மேடைக்கு வந்து விருது வழங் கினார். முன்னர் அதே படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதைப் பெற்ற விக்னேஷ், படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை தனக்கு உறுதுணையாக இருந்து வரும் நயனுக்கு நன்றி கூறினார்.
நயனிடம் கதை சொல்ல போனபோது, அதிக பதற்றமாக இருந்ததாகச் சொன்ன விக்னேஷ், "உண்மையில் பக்கத்தில் இருந்து அவரை ஒருமுறை பார்த்துவிடலாம் என்றுதான் போனேன்," என்றபோது கீழே அமர்ந்திருந்த நயன் உட்பட எல்லாருமே சிரித்து விட்டனர். சன்டெக் மாநாட்டு மண்டபத் தில் வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற தென்னிந்திய திரைப்பட விருது விழாவுக்கு பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தினர் விக்னேஷ் சிவனும் நயனும்.
சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், சிறந்த நகைச்சுவை நடிகர் என தமிழ்ப் பிரிவில் ஆக அதிகமாக 'நானும் ரவுடிதான்' ஐந்து விருதுகளைப் பெற் றது. அதேபோல் மலையாளத்தில் 'பிரேமம்' திரைப்படமும் ஆறு விருதுகளை வென்றது. தமிழ், மலையாளம் இரு பிரிவுகளிலும் தலா 33 விருதுகள் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழ் நட் சத்திரங்களுடன் மலையாள நட்சத்திரங்களும் தமிழிலும் பேசியது நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கி யது. தமிழ், மலையாள பட விருது வழங்கும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு மேல் தொடங்கி பின் னிரவு 2 மணி வரை நீடித்தது. விறுவிறுப்பான பாடல்கள் பாடி, ஆடிய அனிருத்தும் சுழன்று ஆடிய ஹன்சிகாவும் நிகழ்ச்சியைத் துடிப்பாக வைத்திருந்தார்கள்.