தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் பிரபலமான பஞ்சு அருணாசலத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இயக்குநராக, திரைக்கதைஆசிரியராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக ஆற்றிய பல பணி களுக்காக 'சைமா' தமிழ்ப் பிரிவில் அவர் விருது வழங்கிக் கௌரவிக் கப்பட்டார். சிங்கப்பூரில் இந்த விருதைப் பெறுவதில் பெருமை அடைவதாகக் கூறிய, 75 வயதாகும் திரு பஞ்சு அருணாசலம், 'ப்ரியா' படத்தின் பாடலுக்காக சிங்கப்பூர் தனக்கு முதன் முதலில் விருது அளித்ததை நினைவுகூர்ந்தார். முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட 'ப்ரியா' பெரும் வெற்றிப்படம் என்பதுடன் ரஜினிகாந்தை முதன்முதலில் முழு நாய கனாக அறிமுகப்படுத்திய படம் அது என அவர் கூறினார்.
எட்டுப் படங்களுக்கு மேல் இயக்கி இருக்கும் அவர் ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாண ராமன், மைக்கேல் மதன காம ராஜன், குருசிஷ்யன், எங்கேயோ கேட்ட குரல் போன்ற பல படங் களைத் தயாரித்துள்ளார். 'காத லின் தீபம் ஒன்று,' 'கண்மணியே காதல் என்பது கற்பனையோ' போன்ற பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ள அவர், முரட்டுக் காளை, மீண்டும் கோகிலா, சகலகலா வல்லவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார். 'நானும் மனிதன்தான்' என்ற இவரது முதல் பாடல் 1960ல் வெளியானது. ஏஎல்எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய இவர் கண்ணதாசனின் உறவினர். ஆரம்பத்தில் அவரது உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்கு வந்துள்ள இவர், கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல் களை எழுதியுள்ளார்.
70கள் முதல் 90கள் வரையில் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்திருந்த முக்கியப்புள்ளிகளில் ஒருவரான பஞ்சு அருணாசலத்திற்கு விருது வழங்கப்பட்டபோது அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரைப் பெருமைப்படுத்தியது. அவரது காலத்து முன்னணி நட்சத்திரங்களான குஷ்புவும் ராதிகாவும் இந்த விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தனர். படங்கள்: திமத்தி டேவிட்