திரையுலகில் நயன்தாராதான் தனக்கான முன் உதாரணம், வழிகாட்டி என்கிறார் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ். "இந்தியில் நடிக்க வருமாறு எனக்குப் பலமுறை அழைப்பு வந்தது. இந்த விஷயத்தில் நான் நயன்தாராவைப் பின்பற்றினேன்," என விளக்கமும் தருகிறார். கடந்த ஆறு மாதங்களாகவே அவருக்கு வெவ்வேறு தரப்பிடம் இருந்தும் இந்தியில் நடிக்க வருமாறு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றனவாம். ஆனால் யாரிடமும் கீர்த்தி அகப்படவில்லை. "இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது என்று சொல்வார்கள். அதை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன்.
நயன்தாராவின் அழகுக்கும் திறமைக்கும் அவர் தைரியமாக பாலிவுட் பக்கம் சென்றிருக்கலாம். நிச்சயம் அங்கும் வெற்றி பெற்றிருப்பார். "ஆனால் தென்னிந்திய சினிமாவே போதும் என்று அவர் கருதியதால்தான், இன்றைக்கும் பல மொழிகளில் அவரால் முன்னணி நடிகையாக பிரகாசிக்க முடிகிறது. நான் அவரைப் பின்பற்றவே விரும்புகிறேன்," என்கிறார் கீர்த்தி. இவரது பேட்டி நயன்தாராவை நிச்சயம் குளிர வைத்திருக்கும்.