'கபாலி' படத்தின் பாடல் தலைப்பு ஒன்றை விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார். அது என்ன பாடல்? ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா...' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலின் முன் னோட்ட காட்சிகளும் இணையத் தில் வெளியாகி பல்வேறு சாத னைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், 'நெருப்புடா' என்ற பாடல் தலைப்பை தற்போது விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார்.
இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு 'நெருப்புடா' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராக நடிக்கிறாராம். அதனால், இந்தத் தலைப்பை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்ப தால் 'கபாலி' தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் அனுமதி கேட்டுள்ளனர். தாணு எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே அந்த தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். இப்படத்தின் தலைப்பு அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் அறிமுக விழா மட்டுமல்லாது,
விக்ரம் பிரபுவின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் வெளியிடப்பட்டது. அதன்படி, விக்ரம் பிரபுவின் புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிகழ்வில் 'நெருப்புடா' என்ற தலைப்பை கலைப்புலி எஸ்.தாணு அறிமுகப்படுத்தினார்.