மீண்டும் ஜோடி சேர்ந்த ஜெய், அஞ்சலி

ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்திற்கு 'பலூன்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஜெய், அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'எங்கேயும் எப்போதும்'. இதில் இந்த ஜோடியின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. மேலும் இருவருக்கும் இடையே காதல் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் தோன்றி மறைந்தன.

இந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கும் இந்தப் படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். 'பலூன்' என்று தலைப்பு வைத்து, முதல் சுவரொட்டியையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் ஜெய்யின் இருபதாவது படமாகும். மேலும் இந்த படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!